சுவாதி கொலை: கொலையாளியை பிடிக்க மேலும் 2 தனிப்படை.. மொத்தம் 10 படைகள் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவாதி கொலை தொடர்பாக விசாரிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் சுவாதியை கொன்றவனைப் பிடிக்க ஏற்கனவே 8 தனிப்படைகள் விசாரித்துவரும் நிலையில் மேலும் 2 படைகளுடன் சேர்த்து 10 தனிப்படைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொலை செய்யப்பட்ட சுவாதி கொலையில் இன்னும் பெரிய அளவில் திருப்பம் இல்லை என்றாலும், விசாரணைக்கு உதவும் வகையில் புதிய வீடியோ ஓன்று கிடைத்துள்ளது. இதில் கொலையாளி இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அந்த வாகனத்தின் எண்ணை வைத்து தற்போது விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

Swathi murder: 2 addition special squads investigation

சுவாதி பணிபுரிந்த நிறுவனத்திற்கு சென்று, அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர் போன்ற பொருட்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலைக்குப் பின்னர் சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்ததால், கொலையாளி சூளைமேடு பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரயில் ஏறும் சுவாதி பரனுர் ரயில் நிலையத்திலதான் இறங்கிச் செல்வார் என்பதால் இன்று காலையில் பரனூர் ரயில் நிலையத்திலும், சுவாதியின் அலுவலகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுவாதியின் கொலை வழக்கை விசாரணை நடத்த மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவாதியை கொன்ற கொலையாளியைப் பிடிக்க ஏற்கனவே 8 தனிப்படைகள் விசாரித்துவரும் நிலையில் மேலும் 2 படைகளுடன் சேர்த்து 10 தனிப்படைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+