Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராம்குமாரை கொல்ல முயற்சித்த இன்ஸ்பெக்டர்.. செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் தந்தை பரமசிவன் புகார் !

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை கைது செய்யும்போது தென்காசி இன்ஸ்பெக்டர் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி, ராம்குமாரின் தந்தை பரமசிவன் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த, சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை கடந்த 1ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

 swathi murder case Ramkumar's father complained to the police station

கைது செய்ய முயன்றபோது, ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். ராம்குமார் கழுத்தை அறுத்தபோது எடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனிடையே ராம்குமார் கழுத்தறுபட்ட நிலையில் இருந்த போட்டோவை எடுத்தது போலீசார்தான் என ராம்குமாரின் தந்தை ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் ராம்குமாரை கைது செய்யும்போது தென்காசி காவல் ஆய்வாளர் கொலை செய்ய முயற்சித்ததாக கூறி, ராம்குமாரின் தந்தை பரமசிவன் செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட செங்கோட்டை காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ராம்குமார் தந்தை அளித்துள்ள புகார்:

 swathi murder case Ramkumar's father complained to the police station
 swathi murder case Ramkumar's father complained to the police station
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+