தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம்: போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
சென்னை: சுவாதி கொலை செய்யப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. இதனிடையே சுவாதி வழக்கு மற்றும் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பற்றி ஒவ்வொரு மாத இறுதியிலும் டி.ஜி.பி. உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தலைமை தாங்கினார். இதில் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. அசோக்குமார், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) திரிபாதி, உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிகமாக பேசப்பட்டு வரும் சுவாதி கொலை வழக்கு குறித்தும், அதுபற்றிய விசாரணையின் நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை காவல்துறை ஆணையர் எடுத்துரைத்தார். கொலையாளியை பிடிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வியூகம், சிக்கியுள்ள புதிய ஆதாரங்கள் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேலும், சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினைகள் உள்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது. மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம், 6.15 மணிக்கு நிறைவடைந்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications