போலீஸ் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது? தினமும் பேப்பர் படித்து அறிந்துகொண்ட ராம்குமார்
நெல்லை: சுவாதி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், மறுநாள் கொலையாளி ராம்குமார் நெல்லை மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
ஓடுகளால் வேயப்பட்ட சிறு வீடுதான் ராம்குமாரின் சொந்த வீடு. அங்கு, பெற்றோர், தங்கை ஆகியோருடன் தங்கியிருந்தார்.

கொலையாளியை போலீசார் வலைவீசி தேடிவருவதாக ஊடகங்களில் தகவல் வெளியானதை பார்த்து, பயந்து போனார் ராம்குமார்.
பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், போலீசார் நடத்தி வரும் விசாரணை குறித்து, தினசரி செய்தித்தாள்களை வாங்கி படித்துள்ளார். டிவி உள்ளிட்ட பிற ஊடக செய்திகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார்.
சென்னை மேன்ஷன் வாட்ச்மேன் தந்த தகவலையடுத்து, நெல்லை போலீசாருக்கு தகவலை பரிமாறினர் சென்னை போலீசார். இதையடுத்து மஃப்டியில் ராம்குமார் வீட்டை நோட்டமிட்டனர் போலீசார்.
ராம்குமார் சொந்த ஊரில்தான் இருப்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர், கூடுதல் போலீசாரை வரவழைத்து, நேற்று இரவு ராம்குமாரை கைது செய்ய முயன்றனர். இதையறிந்ததும் பிளேடால் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றார் ராம்குமார்.
போலீசார் துரிதமாக செயல்பட்டு உயிரோடு அவரை மீட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ராம்குமார் பயன்படுத்தும் படுக்கையின் கீழே, கடந்த பல நாட்களாக வாங்கப்பட்ட செய்தித்தாள்கள் கிடக்கின்றன. போலீசார் விசாரணை எந்த கோணத்தில் சென்று கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த செய்திகளை பயன்படுத்தியுள்ளார் ராம்குமார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications