பன்றிக்காய்ச்சலுக்கு சென்னை சிறுவன் பலி: நாடுமுழுவதும் 1,731 பேர் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டரை வயது சிறுவன் முகமது பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்த நோய்க்கு 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சிறுவன் பலி
பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கலீல் என்பவரது 2 வயது மகன் முகமது, நேற்று உயிரிழந்தான்.

பெற்றோர் குற்றச்சாட்டு
கடந்த 10 நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முகமதுவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் முகமது உயிரிழந்தான். தனியார் மருத்துவமனையே மகனின் மரணத்திற்கு காரணம் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

30,000 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 1,731 பேர் பலியாகி உள்ளனர்.சுமார் 30,000 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:நடப்பாண்டில், கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, கடந்த 15ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்து 1,731 பேர் பலியாகினர். நாடு முழுவதும், இதன் பாதிப்பு 29,938 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2009 ஆண்டினை விட அதிகமாகும். அந்த ஆண்டில் 27 ஆயிரத்து 236 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.

உயரும் பலி எண்ணிக்கை
கடந்த 2010 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு 1,763 பேர் உயிரிழந்தனர் 20,000 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த மூன்று மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 1,731 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications