பன்றிக்காய்ச்சலுக்கு சென்னை சிறுவன் பலி: நாடுமுழுவதும் 1,731 பேர் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டரை வயது சிறுவன் முகமது பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்த நோய்க்கு 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சிறுவன் பலி
பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கலீல் என்பவரது 2 வயது மகன் முகமது, நேற்று உயிரிழந்தான்.

பெற்றோர் குற்றச்சாட்டு
கடந்த 10 நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முகமதுவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் முகமது உயிரிழந்தான். தனியார் மருத்துவமனையே மகனின் மரணத்திற்கு காரணம் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

30,000 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை 1,731 பேர் பலியாகி உள்ளனர்.சுமார் 30,000 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:நடப்பாண்டில், கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, கடந்த 15ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்து 1,731 பேர் பலியாகினர். நாடு முழுவதும், இதன் பாதிப்பு 29,938 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2009 ஆண்டினை விட அதிகமாகும். அந்த ஆண்டில் 27 ஆயிரத்து 236 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.

உயரும் பலி எண்ணிக்கை
கடந்த 2010 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு 1,763 பேர் உயிரிழந்தனர் 20,000 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த மூன்று மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 1,731 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications