பன்றிக்காய்ச்சலுக்கு சென்னை பெண் மரணம்; நாடுமுழுவதும் பலி எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு
சென்னை: சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 2,123 பேர் உயிரிழந்துள்ளனர். 34,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் நித்யலட்சுமி ( வயது 28). போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹெச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

2123 பேர் பலி
நாடு முழுவதும் இந்நோயால் 34,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (4-ம்தேதி) வரை 2,123 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பலி அதிகம்
நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 436 பேரும், அதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 431 பேரும், ராஜஸ்தானில் 426 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 309 பேரும் பலியாகியுள்ளனர்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு
கர்நாடகாவில் 85, தெலுங்கானாவில் 77, பஞ்சாப்பில் 56, அரியானாவில் 53, உத்தரப்பிரதேசத்தில் 38, மேற்கு வங்காளத்தில் 26, ஆந்திராவில் 23, சட்டீஸ்கரில் 23, இமாச்சலப்பிரதேசத்தில் 23, ஜம்மு-காஷ்மீரில் 20, தமிழ்நாட்டில் 16, கேரளாவில் 14, உத்தராகாண்ட் மற்றும் டெல்லியில் 12 என நாடு முழுவதும் 2123 பேர் பலியாகியுள்ளனர்.

35000 பேர் பாதிப்பு
நாடுமுழுவதும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக 34,636 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தும் நிலையிலும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications