பன்றிக்காய்ச்சலுக்கு சென்னை பெண் மரணம்; நாடுமுழுவதும் பலி எண்ணிக்கை 2,123 ஆக உயர்வு
சென்னை: சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு இளம் பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 2,123 பேர் உயிரிழந்துள்ளனர். 34,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் நித்யலட்சுமி ( வயது 28). போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹெச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

2123 பேர் பலி
நாடு முழுவதும் இந்நோயால் 34,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (4-ம்தேதி) வரை 2,123 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பலி அதிகம்
நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 436 பேரும், அதற்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 431 பேரும், ராஜஸ்தானில் 426 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 309 பேரும் பலியாகியுள்ளனர்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு
கர்நாடகாவில் 85, தெலுங்கானாவில் 77, பஞ்சாப்பில் 56, அரியானாவில் 53, உத்தரப்பிரதேசத்தில் 38, மேற்கு வங்காளத்தில் 26, ஆந்திராவில் 23, சட்டீஸ்கரில் 23, இமாச்சலப்பிரதேசத்தில் 23, ஜம்மு-காஷ்மீரில் 20, தமிழ்நாட்டில் 16, கேரளாவில் 14, உத்தராகாண்ட் மற்றும் டெல்லியில் 12 என நாடு முழுவதும் 2123 பேர் பலியாகியுள்ளனர்.

35000 பேர் பாதிப்பு
நாடுமுழுவதும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக 34,636 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் கொளுத்தும் நிலையிலும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications