போராட்டத்தில் தொண்டர்களை காணோம் என்று கேட்ட நிருபர்.. வேட்டியை மடித்து கட்டிய டி.ராஜேந்தர்
ஜிஎஸ்டிக்கு எதிராக டி.ராஜேந்தரின் லட்சிய திமுக ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டத்தில் எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்று கேட்ட கேள்வியால் டி.ராஜேந்தர் கோபமடைந்தார்.
சென்னை : மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிக்கு எதிராக டி.ராஜேந்தரின் லட்சிய திமுக ஆர்ப்பாட்டத்தின் போது எத்தனை பேர் கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டதால் டி.ஆர் டென்ஷன் ஆனார்.
மத்திய அரசு வரியை கொண்டு வந்து மக்களை வாட்டுவதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே டி.ராஜேந்தரின் லட்சிய திமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது மத்திய அரசே வரி போட்டு மக்களை வதைக்காதே, தமிழகம் தாங்காது என்று கோஷமிட்டனர். ஏழைகள், குடிசைத்தொழிலாளர்களை வதைக்கக் கூடாது, குடிநீருக்குக் கூடவா வரி, தெரியாதா அரசுக்கு ஏழை மக்களின் வலி என்று ஏற்ற இறக்கத்தோடு டி.ராஜேந்தருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மல்லுகட்டிய டி.ஆர்
அதன் பின்னர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசிய போது, திரையில் போராடுபவனல்ல டி.ராஜேந்தர். தரையில் போராடுபவன் என்று அடுக்குமொழியை அவிழ்த்துவிட்டார். செய்தியாளர் ஒருவர், உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் இல்லையே? என்று கேட்க கொதித்து போனவர், வேட்டியை மடித்துக்கொண்டு மல்லுகட்ட வந்துவிட்டார்.

கூட்டத்தில் ரகளை
"கூட்டத்தை எண்ணிப்பார்த்துவிட்டு சொல்லுங்க, 50- 60 பேர் தானா இருங்காங்களான்னுட சொடுக்கு போட்டு ரகளை கிளப்பிவிட்டார் டி.ராஜேந்திரன். இது காசு கொடுத்து சேர்ந்த கூட்டமல்ல தானாக சேர்ந்த கூட்டம் எங்களைப் பார்த்தா கூட்டத்தில் எத்தனை பேர் என்று கேட்கிறீர்கள்? என்று வரிந்து கட்டியிவரை, அவரது கட்சியினரே ஆசுவாசப்படுத்தினர்.

ஆயில் எடுத்து ஆயுளை குறைக்காதீர்
தொடர்ந்து பேசிய டி.ராஜேந்திரன், தமிழகத்தில் ஆயில் எடுப்பதாகச் சொல்லி மக்களின் ஆயுளை குறைக்க வேண்டாம் என்றார். மக்களுக்காக போராடும் தான் டுவிட்டரில் பேசாமல் மக்களோடு மக்களாக நின்று பேசுவதாகச் சொல்லி, நடிகர் கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்தார் டி.ராஜேந்திரன்.

தமிழன் என்பதால் மதிப்பில்லை
தமிழகத்தை சேர்ந்தவன் என்பதால் என்னை தலைவனாக இவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். கள்ளக்குறிச்சியில் ஒரு முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது தான் வெற்றி பெறுவதாக கணிப்புகள் சொன்னபோதும் இயந்திர வாக்குப்பதிவால் தோற்கப்பட்டேன். எனவே இந்தியாவிற்கு இயந்திர வாக்குப்பதிவு கூடாது, தேர்தலை லட்சிய திமுக சந்திக்கிறது இல்லையா என்று பொருத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications