For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனிதநேயம் பெருக வேண்டும், மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும்: டி.ஆர். பக்ரீத் வாழ்த்து

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் வாழ்த்துக்களை இலட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

படைத்தவன் பகுத்தவன் எல்லாம் வல்ல இறைவன்...
கொடுப்பதும் அவனே, எடுப்பதும் அவனே...
'தந்தவன் நீயே...நீ எதைக் கேட்டாலும் தரத்தயார்...
எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள்வாய்'

T. Rajendar wishes muslims on Bakrid

என இறைநேசர் இப்ராஹிம் தன் இன்னுயிர் மகன் உயிரையே தியாகம் செய்ய துணிந்த அருநாள்... அது தியாகத்திருநாள்...

உணவு படைக்க, ஆட்டிறைச்சியோ...மாட்டிறைச்சியோ அடித்தால் அதில் மூன்றில் ஒரு பகுதி நீ உண்ண வேண்டும், ஒரு பகுதி அண்டை வீட்டாருக்கு கொடுக்க வேண்டும், ஒரு பகுதி அல்லல்படும் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்...

நீ உண்டால் அது உணவு...அடுத்தவருக்கு கொடுத்தால் அது உணர்வு...
தன்னலம் கருதாத தியாகம்...
அதற்கு இறைவன் செய்வான் நியாயம்...
'கொடுக்கும் இறைவா நீ கொடுப்போம் குர்பானி...
இருப்பாய் மறைவாய் நீ...எதையும் செய்வாய் நிறைவாய் நீ...

இஸ்லாமிய சகோதரர்கள் பக்ரீத்தை பாங்காக கொண்டாட வேண்டும்... பண்போடு பண்பு மேலோங்க வேண்டும்...மனிதநேயம் பெருக வேண்டும்...மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும்...மண்ணுலகம் செழிக்க வேண்டும்...மன அமைதி கிடைக்க வேண்டும்... என இலட்சிம் பொங்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்.

English summary
Actor turned politician T. Rajendar has wished muslims on Bakrid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X