மத்திய அரசு போடுவது இரட்டை வேடம்.. இந்த தப்புக்கு மக்கள் கட்ட வேண்டும் லாடம்.. டி.ஆர். ஆவேசம்
லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தனது வழக்கமான அடுக்குமொழியில் உணர்ச்சி பொங்க மத்திய அரசை வறுத்தெடுத்து பேட்டியளித்தார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார். ஆங்காங்கு இதேபோல மக்களும் போராட்டத்தில் ஈடுபட அவர் அழைப்புவிடுத்தார்.
இதனிடையே சிம்புவிற்கு ஆதரவு தெரிவித்து அவரது இல்லத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் குவிந்தனர்.

போராட்டத்திற்கு பிறகு சிம்பு பேட்டியை தவிர்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். அவரது தந்தையும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தனது வழக்கமான அடுக்குமொழியில் உணர்ச்சி பொங்க பேட்டியளித்தார். அவர் கூறியது:
தீர்ப்பில் ஏற்படுகிறது தாமதம். இதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் பாடம். மத்திய அரசு போடுவது இரட்டை வேடம். இந்த தப்பு தண்டாவுக்கு எதிர்காலத்தில் தமிழக மக்கள் கட்ட வேண்டும் லாடம். இப்படி இருந்தால்தான் ஒதுங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் வேதம். தமிழ் கடவுள் முருகனை கும்பிட்டு ஏற்றுவோம் சூடம்.
தமிழர்களே நம்மிடம் இருப்பது லட்சியம். நாம் வெற்றி பெருவது நிச்சயம். திரட்டுவோம் தமிழர் படை. மத்திய அரசு சொல்ல வேண்டும் விடை. இறங்க மாட்டோம் இறங்குனா உறங்க மாட்டேம். இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார். மேலும், 2017ல் தீவிர அரசியலில் இறங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications