பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்திய அதிகாரியை விசாரிக்க கோரி தடா நீதிமன்றத்தில் மனு!

Subscribe to Oneindia Tamil

Perarivalan
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்திய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பது குறித்து வரும் 17-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று தடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜிவ் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பேரறிவாளன் வாக்குமூலத்தில் திருத்தம் செய்ததாக சி.பி.ஐ முன்னாள் அதிகாரி தியாகராஜன் கூறியிருந்தார்.

இதனால் தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் துரைசெல்வன் என்பவர் சென்னை தடை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை ஏன் வாங்கி வரச் சொன்னார்கள் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறினார். ஆனால், தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தியாகராஜன் வாக்குமூலத்தில் சேர்க்காமல் திருத்தம் செய்துள்ளார். இதனை அவரே தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். தடா நீதிமன்ற நீதிபதி தியாகராஜனிடம் ரகசியமாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இம் மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து வரும் 17ந் தேதி முடிவு செய்யப்படும் எனக் கூறி, நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+