Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐக்கிய அரபு நாடுகளில் சித்ரவதைக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: வெளிநாடு சென்று சித்ரவதை அனுபவிக்கும் குமரி மற்றும் நெல்லை மாவட்ட மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Take steps to release TN fishermen says SAFF

இது தொடர்பாக அவர்கள் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மான் துறைமுகத்தில் குமரி மாவட்டம் புத்தன் துறையை சேர்ந்த அலி, ஆண்டனி, சதீஷ், மெதீஸ், பனிப்பிச்சை, ராஜன், புதூரை சேர்ந்த பாலமுருகன், சஞ்சய் பெருமாள், கன்னியாகுமரியை சேர்ந்த சந்திராயப்பன், பெலிக்ஸ், சஞ்சய்காந்தி, சகாய ஆன்டோ, ஜான்சன், ரமேஷ், கோவளத்தை சேர்ந்த சகாய அபிஷேக், பொழிக்கரையை சேர்ந்த பிரகாசம், ராஜாக்க மங்கலம் துறையை சேர்ந்த சிலுவை, ஜோசப், சசிகுமார், அந்தோணி, ராமன்புதூரை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் நெல்லை மாவட்டம் இடிந்த கரையை சேர்ந்த தாமஸ், ஜெரான், அயிஷ், ராய்ஸ்டன் ஆகிய 25 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இவர்களுடன் அஜ்மான் பகுதியை சேர்ந்த இரண்டு மீனவர்களும் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒருவர் படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். அவரை உடன் இருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் கடலில் மூழ்கி மாயமாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளர்கள் மதார் அலி மதார், ஜமால் அலி மதார் ஆகியோர் ஐக்கிய அரபு நாட்டு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தமிழக மீனவர்கள் அனைவரும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் பாஸ்போர்ட்டுகளை படகு உரிமையாளர்கள் பறித்துக்கொண்டனர். மேலும் அவர்கள் ஐக்கிய அரபு நாட்டுக்குள் தொழில் செய்வதற்கு வழங்கப்பட்ட சான்றிதழையும் பறித்துக்கொண்டனர்.

இதனால் தமிழக மீனவர்கள் 25 பேரும் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களை படகின் உரிமையாளர்கள் படகிலேயே சிறை வைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை கும்பலில் இருந்த ஒருவர் படம் எடுத்து சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

வெளிநாடு சென்று சித்ரவதை அனுபவிக்கும் குமரி மற்றும் நெல்லை மாவட்ட மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல் மத்திய அரசுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+