கீழடியில அந்த ஒரு ஆளுதான் வேல பாப்பாரா.. மத்தவங்க பாக்க மாட்டாங்களா: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு
கீழடி அகழாய்வின் தலைவர் அமர்நாத் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, “அந்த ஒரு ஆளுதான் வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்களா” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிராக பேசி
மதுரை; பல ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வரலாற்றை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த கீழடி அகழாய்வு பகுதியை, மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் பார்வையிட சென்ற போது, பொதுமக்களும் தமிழ் தேசம் அமைப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேலும் பல அரிய பொருட்களும் அந்த அகழ்வாய்வில் பொக்கிஷம் போல கிடைத்துள்ளது.
இந்த ஆய்வு நன்றாக நடந்து கொண்டிருந்த போதே, அகழ்வாய்வின் தலைவர் அமர்நாத்தை மத்திய அரசு விதிமுறைகளை காரணம் காட்டி அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தது. மேலும், இந்த ஆய்வில் ஈடுபட்ட 26 பேர் கொண்ட மொத்த குழுவினரையும் கூண்டோடு இடமாற்றம் செய்தது மத்திய அரசு.

எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உருவான நிலையில், இன்று கீழடியை பார்வையிட மத்திய கலாச்சார அமைச்சர்கள் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் சென்றனர். அவர்களை கீழடி அகழ்வாய்வை பார்க்க விடாமல், தமிழக பண்பாட்டிற்கு எதிரான பாஜக அமைச்சர்களே திரும்பிப் போங்கள் என்ற கோஷத்தை பொதுமக்களும் தமிழ்தேசம் அமைப்பினரும் எழுப்பினர்.

அந்த ஆளு..
இதனால் கடுப்பான நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "நாங்கள் அமர்நாத்தை மட்டும் மாற்றவில்லை. இந்தப் பணியில் இருந்து 26 பேரையும் மாற்றியுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கும் அதிகாரி மாற்றுவது விதி. இது வழக்கமான ஒன்று. அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்" என்று கூறினார்.

பண்பாடா?
அகழ்வாய்வுத் துறையின் தலைவராக உள்ள ஒரு அதிகாரியை அந்த ஆளு என்று ஒரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருமையில் பேசியிருக்கிறார். அவரின் பேச்சிற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஒரு அதிகாரியை அந்த ஆளு என்று சொல்வதெல்லாம் அமைச்சருக்கு அழகாக பண்பாடா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தோட தோட மாலும்
அதே போல அமர்நாத் இடத்திற்கு இன்னொருவரை போட்டிருப்பதாகவும், அவர் தமிழை ஓரளவு புரிந்து கொள்வார் என்றும் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார். பேசுவதையே ஓரளவிற்குத்தான் ஒருவரால் புரிந்து கொள்ள முடியும் என்றால், அவருக்கு எப்படி தமிழர்களின் ஆதிகால பண்பாட்டைபுரிந்து கொள்ள முடியும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications