திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே எங்கள் ஆதரவு.. கிறிஸ்தவ பிஷப் கவுன்சில் அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழக கிறிஸ்தவ பிஷப் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பிஷப் கவுன்சில் தலைவரும், மதுரை மறைமாவட்ட ஆயருமான அந்தோணி பப்புசாமி வெளியிட்டுள்ள அறிகை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும். மதச்சார்பற்ற, ஜனநாயக மதிப்பீடுகளை காக்கும் தருணம் இது. எனவே, இந்த கூட்டணிக்கு அதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி மேல் எந்த தவறும் இல்லை என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. மற்ற கட்சிகளை ஒப்பிடும் போது இந்த கட்சிகள் பரவாயில்லை என்ற காரணத்தால் இந்த கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தமிழக கிறிஸ்தவர்களின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், எங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்தோம்.
திமுக எங்களை அணுகியது. நாங்கள் முன்வைத்த தேவைகள் மற்றும் எங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications