தமிழக மீனவர்கள் துபாயில் பரிதவிப்பு- பெற்றோர் கலெக்ரிடம் கண்ணீர்
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேர் துபாயில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீருடன் மனு கொடுத்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் புத்தன்துறையை சேர்ந்த 12 பேர் துபாய் நாட்டில் உள்ள அஜ்மன் என்ற இடத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இவர்கள் துபாயை சேர்ந்த மத்தா என்பவரது விசைப்படகில் தொழில் செய்து வந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி துபாய் கடலில் இவர்கள் 12 பேரும், துபாயை சேர்ந்த 2 பேரும் ஆக மொத்தம் 14 பேர் ஓரே விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது துபாயை சேர்ந்த மீனவர் கமீஸ் கடலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
அவரை சக மீனவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக மற்ற மாணவர்களை துபாய் நாட்டு அதிகாரிகள் பிடித்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் விசைப்படகின் அரேபியா முதலாளி அவர்களை கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விசைப்படகிலேயே கடலுக்குள் சிறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு படகில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களது முதலாளி பாஸ்போர்ட் மற்றும் விசா போன்வற்றை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் மீனவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்க முடியாது. இதனால் அரேபியா போலீசார் அவர்களை கைது செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிய வந்ததை அடுத்து தெற்காசிய தோழமை மீனவர் கூட்டமைப்பு பொது செயலாளர் சர்ச்சில் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் நாகர்கோவில் வந்து குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் சர்ச்சில் கூறுகையில், " துபாய் மீனவர் பலியான சம்பவத்தில் தமிழக மீனவர்கள் மீது எந்த தவறும் இல்லை.
அவராக தவறி கடலில் விழுந்துள்ளார். இதற்கு தமிழக மீனவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இருப்பினும் உள்ளூர் நெருக்கடியால் அரேபியா முதலாளி பாஸ்போர்ட் உள்ளி்ட்டவற்றை திரும்ப தர மறுக்கிறார். எனவே அவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications