இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான மீனவர் உடல் ராமேஸ்வரம் வந்தது
இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்சோ உடல் ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ (22) என்பவர் உயிரிழந்துள்ளார். சரோன் என்ற மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து மீன்பிடிக்க சென்றிருந்த தமிழக மீனவர்கள் ஆபத்தான நிலையில் கரைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் உயிரிழந்த மீனவர் உடலை மீட்ட சக மீனவர்கள் அவரது உடலை ராமேஸ்வரம் கொண்டுவந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு பிரிட்சோ உடல் எடுத்துச் செல்லப்பட்டது. படுகாயம் அடைந்த சரோன் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications