For Quick Alerts
For Daily Alerts
Just In
பெங்களூரு கலவரத்தைக் கண்டித்து அண்ணா சாலையில் போராட்டம்... போக்குவரத்து பாதிப்பு
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரு கலவரத்தைக் கண்டித்து சென்னை அண்ணா சாலையில் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அண்ணா சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி தொடர்பான பிரச்சனையில் பெங்களூரு கலவரம் தொடர்பாக தமிழகத்தில் ஆங்காங்கே எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா சாலையில் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கர்நாடக மாநில அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதனையடுத்து. போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamil Ezhuchi Iyakkam protested over Bengaluru riots at Chennai Anna Salai.
Story first published: Tuesday, September 13, 2016, 18:35 [IST]