Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை மீதான கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு எதிர்ப்பு- சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழினப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும்; கலப்பு நீதிமன்ற விசாரணையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக மே 17 இயக்கத்தின் சார்பாக நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

Tamil Movements besiege UN office

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

Tamil Movements besiege UN office

அதில் இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை பட்டியலிட்டு சர்வதேச நீதிபதிகள், இலங்கை நீதிபதிகளைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது உலகத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Tamil Movements besiege UN office

இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக ஐ.நா. சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

Tamil Movements besiege UN office

இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் தி.க, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+