தமிழகத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவு: ஏற்பு - 5362 தள்ளுபடி - 1783
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது.
மொத்தம் 7145 வேட்புமனுக்களில் 5362 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1783 வேட்புமனுக்கள் தள்ளபடி செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. 29ம் தேதி மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்தது.

இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுப் பார்வையாளர்கள் 122 பேர் முன்னிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன.
இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மொத்தம் 7145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் அதில் 1783 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும், 5362 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.












Click it and Unblock the Notifications