மருத்துவ படிப்பிற்கு நீட் வேண்டாம்.. தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
சென்னை: மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய அளவில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தத் தேர்வை எழுதாமல் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேரும் வகையில் இன்று சட்டப்பேரவையில் சட்ட முன் வடிவை சுகாதாரத் துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக 'நீட்' எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்த்தன. இந்தத் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று வாதிடப்பட்டது. என்றாலும் மத்திய அரசு நீட் தேர்வில் உறுதியாக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் வலியுறுத்தி இருந்தார்.
இதனையடுத்து, நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் இந்த சட்ட முன் வடிவு சட்டமாகும் போது, மூலம் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற வழிவகை ஏற்படும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications