செமட்விஸ்ட்.. அமைச்சரவை மாற்றமா? வந்து விழுந்த கேள்வி! சிரித்தபடி அமைச்சர் துரை முருகன் சொன்ன பதில்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது என பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது. இதற்கிடையே இன்று மூத்த அமைச்சர் துரை முருகன் ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டதற்கு துரை முருகன் சொன்ன பதில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டு ஆட்சியை தமிழகத்தில் நிறைவு செய்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தான் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரை முருகன் இன்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி பத்திரிகையாளர்கள் இன்று அமைச்சர் துரை முருகனிடம் கேட்டனர். சென்னை கோட்டூர்புரத்தில் துரை முருகன் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதுபற்றி துரை முருகன் கூறியதாவது: ‛‛நான் திருநெல்வேலி கூட்டத்தை முடித்துவிட்டு இன்று தான் சென்னை வந்தேன். கோட்டைக்கு சென்றுவிட்டு சில முக்கிய ஆவணங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுள்ளேன். இந்த பரபரப்பு எல்லாம் நீங்கள்(பத்திரிகையாளர்கள்) தான் காட்டுகிறீர்கள். நான் ஒன்றும் ஆளுநர் வீட்டுக்கு போகவில்லை. போனால் போகபோகிறேன் என்று கூறிவிடுவேன். இதில் என்ன இருக்கிறது'' என சிரித்தபடி கூறினார்.

இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ தொடர்ந்து தலைமை செயலகத்தில் இருந்து செய்தி வருகிறது. அமைச்சரவையில் மாற்றம் உள்ளது. புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என செய்திகள் வருகிறது'' என கேள்வி கேட்டது. அதற்கு துரை முருகன், ‛‛அதுவும் எனக்கு தெரியாது'' என்றார். மேலும் அமைச்சரவை மாற்றம் பற்றி கேள்விக்கு ‛யாமறியேன் பராபரமே' என துரை முருகன் பதிலளித்தார்.
அதன்பிறகு இன்னொரு பத்திரிகையாளர், ‛‛நிர்வாக காரணங்களுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல் ஏதேனும் நடக்கிறதா?'' என கேட்டார். அதற்கு துரை முருகன், ‛‛ஒரு முதல் அமைச்சருக்கு தன்கீழ் பணியாற்றுபவர்களை மாற்றலாம். எடுக்கலாம். ஒருவருக்கு பதில் புதியவர்களை நியமிக்கலாம். இது முதல் அமைச்சரின் உரிமை. அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அது நடக்கிறதா? என்பது உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ? அவ்வளது தான் எனக்கும் தெரியும்'' என்றார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications