புழல் சிறையில் டெலிபோன் பூத், பேக்கரி: 'கேக்'கில் இரட்டை இலை...பரபரப்பு!!

புழல் மத்திய சிறை வளாகத்தில் பொருட்கள் விற்பனைக்கூடம், காவலர்கள் காத்திருப்புக் கூடம், பார்வையாளர்கள் காத்திருப்பு அறை, சோதனை அறை, அடுமனை தொழில் கூடம் மற்றும் தண்டனை சிறையில் இரண்டு தொலைபேசி, விசாரணை சிறையில் கைதிகள் பேசுவதற்கு ஆறு தொலை பேசி, மகளிர் சிறையில் ஒரு தொலைபேசி ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி முலம் திறந்து வைத்தார்.
பின்னர் சிறைக்கு வந்த பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிறை கைதிகளால் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் காய்கறி, கீரைகளை வாங்கி சென்றனர்.
கைதிகள் தயாரித்த கேக்கில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்தது. பேக்கரி, காய்கறி விற்பனை கூடம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என்றும் இங்கே பொது மக்கள் மற்றும் சிறைக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கிப் பயன்அடையுமாறு சிறைத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அனைத்து சிறைச்சாலைகளிலும்
சிறை கைதிகள் தங்களது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வகையில், ரூ. 1 கோடியே 63 லட்சம் செலவில் சென்னையில் 2 மத்திய சிறைகள் மற்றும், வேலூர், திருச்சி, கடலூர், மதுரை, நெல்லை, சேலம், கோவை ஆகிய 9 மத்திய சிறைகள், சென்னை, திருச்சி, வேலூர் ஆகிய 3 பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளி ஆகிய இடங்களில் 54 தொலைபேசியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முறைக்கு 10 நிமிடங்கள் என்ற கணக்கில் ஒரு மாதத்திற்கு 3 முறை, சிறையில் இருந்தபடியே சிறைவாசிகள் தங்களது உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களிடம் பேசலாம். சிறைகளில் பொது தொலைபேசி வைக்கப்பட்டதால் செல்போனை கைதிகள் திருட்டுத்தனமாக பயன்படுத்துவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications