For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் பராக் பராக்...தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நூறு சதவீதத்தை அடைந்தது.

இதே போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சமாக ஊழியர்களுக்கு 1000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த அகவிலைப்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் கணக்கிட்டு 3 மாத நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம் 15 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பலன் அடைவார்கள்.

தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் சண்முகம் இதற்கான அரசு ஆணையை பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே 90 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.

English summary
Tamilnadu ministry has ordered proposal to dearness allowance hike, to benefit 18 lakhs government employees, pensioners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X