தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கூல்கூல் அறிவிப்பு
தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே கோடைக்காலத்தின் உச்சபட்ச வெப்பம் தகிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது.
தமிழகத்தில் பலத்த மழை
இந்த நாட்களில் வெப்பம் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்
திருச்சி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், சிவகங்கையில் 13 செ.மீ., பீளமேடு 4 செ.மீ., திண்டுக்கல் மற்றும் குன்னூரில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மக்கள் நிம்மதி
நாளை அக்னிநட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என மக்கள் அஞ்சியுள்ளனர். இந்நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.