முடி வெட்ட இனி “டபுள் சார்ஜ்”- முடிதிருத்துவோர் சங்கம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முடித்திருத்தும் கட்டணமானது அதற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து உயர்வதாக முடித்திருத்துவோர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முடித்திருத்தம் நிலையங்களுக்கு தேவையான அழகு பொருட்கள் விலை உயர்வு மற்றும் கடைகளின் வாடகை உயர்வு, வேலை ஆட்கள் சம்பள உயர்வு காரணத்தால் முடித்திருத்தம் கட்டணம் வருகிற 15 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தலைவர் எம்.முனுசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications