திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் கோரி செல்போன் டவரில் ஏறி போராடிய தமிழ் தேசிய கட்சியினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திண்டுக்கல், மற்றும் நெல்லை மாவட்டங்களில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய தமிழ் தேசிய கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பிற்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை ஒரு திட்ட அமைப்பு தான் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் தேசிய கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில், 6 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். அதேபோல நெல்லை மாவட்டம் கடையத்தில் தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த 14 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், செல்போன் டவரில் ஏறி திண்டுக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் போராட்டம் நடத்தியவர்களை கீழே இறக்கி அவர்களை கைது செய்தனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications