தேசிய கீதம் பாடும்போது தியானத்தில் இருந்தேன்னு சொன்னா சட்டம் என்ன செய்யும்?
தேசிய கீதம் இசைக்கும் போது தியானத்தில் இருந்தேன் என சொல்லிவிட்டால் சட்டம் அமைதியாகிவிடுமா? என கேள்வி எழுப்பப்படுகிறது.
Recommended Video

சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது தியானத்தில் இருந்தார் விஜயேந்திரர் என சங்கர மடம் விளக்கம் தந்துள்ளது. தேசிய கீதம் பாடும்போதும் தியானத்தில் இருந்தேன் என சொல்லிவிட்டால் சட்டம் அமைதியாக இருந்துவிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழக அரசின் சட்டப்படி தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இல்லையெனில் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த குற்றமாகும்.

தமிழ்த் தாய் வாழ்த்துக்கும்...
தேசிய கீதத்துக்கு என்ன மரியாதை அளிக்கப்படுகிறோ; தேசிய கீதத்தை அவமதித்தால் என்ன தண்டனை வழங்கப்படுகிறதோ அது தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்திலும் பொருந்தும். இதை அவமதிக்கிற உரிமை எவருக்கும் எதன் பெயரிலும் இல்லை.

அரசை அவமதிப்பது
தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கின்ற போது எதன் பெயராலும் யாருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகிற போது தியானத்தில் இருந்தேன்; ஜெபம் செய்து கொண்டிருந்தேன்; தொழுகை நடத்திக் கொண்டிருந்தேன் என சொல்லுவது என்பது அரசை அவமதிக்கும் தேசவிரோத குற்றம்.

தமிழக அரசு விரோதம்
எதற்கெடுத்தாலும் ஆண்டி இந்தியன்ஸ், தேசவிரோதிகள் என முத்திரை குத்தும் எச். ராஜாவின் கூட்டத்தில்தான் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பதும் தமிழக அரசு விரோதம் அல்லவா?

சமாளிக்கவே தியானம்
தமிழக ஆளுநரே எழுந்து நின்று மரியாதை செய்திருக்கிறார் என்ற நிலையில் விஜயேந்திரர் எப்படி விதி விலக்காக இருக்க முடியும் என்று தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். 'தியானத்தின்' பெயரால் நியாயப்படுத்த முயற்சிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள். இங்கே நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர்; அரசின் தலைவர் முதல்வர்.. அவர்களுக்கே விதி விலக்கு இல்லை.

சட்டத்தை வளைப்பதா?
சட்டத்தின் முன் யாராக இருந்தாலும் குற்றம் என்பது குற்றமே. ஆகையால் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது மட்டுமில்லாமல் அதை நியாயப்படுத்து முயன்றுள்ளதும் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அப்படியானால் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேசிய கீதத்திற்கு என்ன மரியாதை உண்டோ, நிச்சயம் அது தமிழ்த் தாய் வாழ்த்துக்கும் உண்டு என்பதே மக்களின் கருத்து,
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications