மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் கிருஷ்ணசாமி மரணம்- வைகோ
தமிழக மாணவர்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அகதிகளைப் போல அலைக்கழிப்பது வலியை ஏற்படுத்துகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அகதிகளைப் போல அலைக்கழிப்பது வலியை ஏற்படுத்துகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை திருத்துறைப்பூண்டியில் இருந்து அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி, மாரடைப்பு ஏற்படடு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழக மாணவர்கள் அகதிகளைப் போல எந்த வசதியும் இல்லாமல் பரிதவிப்பது வலியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம் என்றும், முறையான வசதிகள் ஏற்படுத்தித் தராமல் மாணவர்களை அலைக்கழித்ததே கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் மீது ஏவப்படும் இந்த செயல்களைப் பார்க்கையில் நெஞ்சு வெடிக்கிறது. இதுவரை தமிழகம் இப்படி நிலையைச் சந்தித்ததில்லை, இந்த நிலை விரைவில் மாறவேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications