காவிரி பிரச்சினை.... சீமான் பேரணியில் தீக்குளித்த நாம் தமிழர் தொண்டர் விக்னேஷ் கவலைக்கிடம்
சென்னை: சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ்க்கு உயிர்காக்கும் கருவி பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காவிரி உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றி படுகாயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 95 சதவீத தீக்காயத்துடன் விக்னேஷ்க்கு உயிர்காக்கும் கருவி பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன்னார்குடி சேர்ந்த விக்னேஷ் நாம் தமிழர் கட்சியின் பாசறை செயலாளராக இருந்தார்.












Click it and Unblock the Notifications