ஜெயலலிதாவின் புரட்சிகர உத்தரவுகள்.. வேல்முருகன் பாராட்டு
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளின்படி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துதல், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளிட்டுள்ள அறிக்கை,

தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதாவிற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வராக பதவியேற்ற உடனேயே தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் புரட்சிகரமான உத்தரவுகளை பிறப்பித்து வாக்களித்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்,
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்து வரும் கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை மூடவும் மது கடைகளின் நேரம் திறப்பை காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணி என குறைத்தும் உத்தரவிட்டிருக்கிறார்.
இதேபோல் விவசாயிகளின் அனைத்து வகையான ரூ.5780 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி. வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம், கைத்தறிகளுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கிடும் உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்
மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராமுக்கு பதிலாக 8 கிராம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான இத்தகைய புரட்சிகரமான உத்தரவுகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்விற்கு வாழ்வுரிமைக் கட்சியின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications