தமிழகத்தில் இந்தியை திணிக்கும் தனியார் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்: தமிழர் பண்பாட்டு நடுவம்
சென்னை: தமிழகத்தில் இந்தியை திணிக்கும் தனியார் நிறுவனங்களை அதிமுக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் ராச்குமார் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த சில காலங்களாக பல தனியார் நிறுவனங்கள் தமிழக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இந்தி மொழியில் விளம்பரம் செய்து வருகின்றன. இந்திய தொடர்வண்டித்துறை தமிழ் நாளிதழ்களில் நேரடியாக இந்தி மொழியில் மட்டுமே விளம்பரங்கள் செய்து வருகிறது. பல இந்திய அரசு வங்கிகளும் இந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே விளம்பரம் கொடுத்து வருகின்றன.
அண்மையில் தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில நாளிதழில் ஆம் ஆத்மி கட்சி இந்தி மொழியில் முழுபக்க விளம்பரம் கொடுத்தது. இப்படியாக தனியார் நிறுவனங்களும், இந்திய அரசு நிறுவனங்களும், இந்தி அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் இந்தியை போட்டி போட்டுக் கொண்டு திணித்து வருகின்றன. வட மாநில நாளிதழ்களில் நாம் இந்தி, ஆங்கிலம் தவிர்த்த எந்த விளம்பரங்களையும் பார்க்க இயலாது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி தொடர்ச்சியாக திணிக்கப்பட்டு வருகிறது.
இணைய வணிகம் செய்யும் பிளிப்கார்ட் என்ற நிறுவனம் தமிழ் நாளிதழின் முதல் பக்கத்திலேயே இந்தி மொழியில் விளம்பரம் செய்கிறது. இத்தகைய நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியதாகும். 1976 இந்திய அலுவல் மொழி சட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது என தெளிவாக குறிப்பிடப்பட்ட பின்னரும் தனியார் நிறுவனங்களும், இந்திய அரசு நிறுவனங்களும் தமிழை புறக்கணித்து இந்தியை தமிழகத்தில் திணித்து வருகின்றன. தமிழை பயன்படுத்தாமல் இந்தியையும், ஆங்கிலத்தையும் மட்டுமே திணிக்கும் தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் வணிகம் செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இந்தியை திணிக்கும் இந்திய அரசு நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆலோசனையும் எச்சரிக்கையும் வழங்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் தொடர் இந்தித் திணிப்பை கண்காணிக்க இந்தித் திணிப்பு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இந்த குழு எங்கெல்லாம் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி திணிக்கப்படுகிறது என்பதை கண்காணித்து அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக மக்களின் மொழி உரிமைகள் இனியும் பறிபோகாமல் இருக்க தமிழக அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications