தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பாஜக தான்...சொல்கிறார் தமிழிசை !
சென்னை: தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது, தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பா.ஜ.க. தான். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பயணம் நாடகம் என்று வைகோ கூறியுள்ளார். எப்போதும் நாடகம் நடத்தி கொண்டிருக்கும் வைகோவுக்கு எல்லாமும் நாடகமாகத்தான் தெரிகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சரியான வெளியுறவு கொள்கையை நிலைநிறுத்தி விட்டு வந்துள்ளார். அதை நாடகம் என்று சொன்னால் வைகோவின் பார்வைக்கு உண்மை எது என்று தெரியவில்லை, அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை, அவரின் அங்கீகாரத்திற்காகவும் நாங்கள் காத்திருக்கவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications