16 மணி நேரத்தில் 100 இடங்களில்... விருகம்பாக்கத்தைத் "தாக்கும்" தமிழிசைப் புயல்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, இன்று ஒரே நாளில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்து புதிய சாதனை படைக்க பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால், நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன் ஒருகட்டமாக தனது தொகுதியில் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணிவரை சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறார். இன்று ஒரு நாளில் மட்டும் 100 இடங்களில் வாக்கு சேகரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, தமிழிசையை ஆதரித்து மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானியும் இன்று விருகம்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications