கனிமொழி குறித்து எச் ராஜா டுவீட்டை கண்டிக்க மனம் இல்லாமல் வருந்தும் தமிழிசை!
கனிமொழி குறித்து எச் ராஜா போட்டுள்ள அநாகரீகமான டுவீட்டுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மனவேதனை அடையும் தமிழிசை.
Recommended Video

சென்னை: கனிமொழி குறித்து எச் ராஜா போட்டுள்ள அநாகரீகமான டுவீட்டுக்கு கண்டனம் தெரிவிக்காத தமிழிசை சௌந்தரராஜன் மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவி விவகாரம் குறித்தும் பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் குறித்தும் திமுக கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் கனிமொழி குறித்தும் கருணாநிதி குறித்தும் அநாகரீகமான கீழ்த்தரமான கருத்தை எச் ராஜா பதிவிட்டுள்ளார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து திமுக தலைமையோ கண்டனம் ஏதும் தெரிவிக்காமல் கீழ்த்தரமான கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டது.
இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் டுவிட்டரில் தன் பதிவில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது..... என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது.....
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 18, 2018
பாஜக மாநில தலைவராக உள்ள தமிழிசையால் இப்படி கீழ்த்தரமாக டுவீட் போட்ட எச் ராஜாவை கண்டிக்கக் கூட மனமில்லாமல் மனவேதனை அடைகிறேன் என்று கூறியிருப்பது உண்மையில் மனவேதனையை தருகிறது.












Click it and Unblock the Notifications