மெர்சலுக்காக என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டுகிறார்களே... தமிழிசை 'புலம்பல்'
மெர்சல் வசங்களை நீக்கச் சொன்னதால் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழிசை புலம்பியுள்ளார்.
சென்னை: மெர்சல் திரைப்படங்களில் அரசுக்கு எதிரான வரிகளை நீக்கச் சொன்னதால் என்னைத் தொலைபேசியில் அழைத்தும், சமூக வலைத்தளங்களிலும் மிரட்டல் விடுக்கிறார்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தீபாவளி அன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி குறித்தும் டிஜிட்டல் இந்தியா குறித்தும் தவறாக சித்தரிக்கும்படியான வசனங்கள் இருந்தன. அதனால் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் தமிழிசை செளந்தரராஜன்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக தங்களது கருத்தைப் பதிவு செய்து வருகின்றன. தேசிய அரசியலில் மெர்சல் குறித்தான விவாதம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், மெர்சல் படம் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக, கட்டப்பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பவர் என்று திருமாவளவனைக் குறிப்பிட்டார் தமிழிசை. அதனால், தமிழகமெங்கும் வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்க்கள்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், ' மெர்சல் படம் குறித்து நான் சொன்ன கருத்துக்கு என்னை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். இது தவறான ஒரு அணுகுமுறை.'
'இதற்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். மெர்சல் குறித்து சரியான முறையிலேயே எனது எதிர்ப்பை பதிவுசெய்தேன். எனது முடிவில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை' என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications