கட்டுடல் காளைகளும் காளையும் கலாச்சார பொலிவுடன் விளையாடும் பொங்கலாகவும் ... தமிழிசை வாழ்த்து!
சென்னை: புதியன புகும் ஒரு புதிய பொங்கலாக இப்பொங்கல் மலர்ந்துள்ளது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இதுகுறித்த இவரது அறிக்கையில், "மத்தியில் நம் மோடியின் தலைமையில் அமைந்துள்ள நல்லாட்சி பீடுநடை போட்டு வருகிறது. வங்கி கணக்கு இல்லாதவர்கட்கெல்லாம் வங்கிக்கணக்கு துவங்க மக்கள் நிதி திட்டம் சமையல் எரிவாயுவுக்கான மானியம் மக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டம், நாட்டில் தூய்மை பற்றிய விழிப்புணர்வும் லஞ்சம் ஒழிப்புணர்வும் ஏற்படுத்தும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்த ஆட்சி மக்களின் வாழ்க்கையில் இன்பம் பொங்கும் ஆட்சியாகவும் மகிழ்ச்சி தங்கும் ஆட்சியாகவும் எங்கும் நல்லாட்சி மிளிரும் ஒரு சிறந்த ஆட்சியாகவும் ஒரு புதிய சூழ்நிலையை பாரத தேசத்தில் பதிய வைத்திருக்கிறது.

லஞ்சம், ஊழல், கடன் கருப்புபணம், வேலைவாய்பின்மை போன்ற பழையனவைகள் கழிந்து வேலை வாய்ப்பு, நேரடி மானியம், தூய்மை, வாய்மை, பசுமை, மகிழ்ச்சி போன்ற புதியன புகும் ஒரு புதிய பொங்கலாக இப்பொங்கல் மலர்ந்துள்ளது.
ஆரம்பத்திலேயே ஏற்பட்ட இந்த மகிழ்ச்சி இன்னும் போகப் போக பாரத தேசத்தில் ஓங்கி வளரும் உயர்ச்சியளிக்கும் முயற்சியில் நம் அரசு முனைந்துள்ளது. அதே நல்ல சூழ்நிலை தமிழகத்திலும் நிலவ, ஒரு டாஸ்மாக் இல்லாத தமிழகம், லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகம், மின்வெட்டில்லாத தமிழகம், அடிப்படை கட்டமைப்புக்கள் உள்ள தமிழகம் மலர இந்தப் பொங்கல் வழிவகுக்கட்டும்.
இந்தப் பொங்கல் நம் தமிழர்களின் வாழ்க்கையிலும், இலங்கையில் வாழும் தமிழர்கள் வாழ்க்கையிலும் இன்பம் பொங்கும் பொங்கலாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கட்டுண்ட ஜல்லிக்கட்டும் நாம் மேற்கொண்டுள்ள முயற்சியினால் கட்டவிழ்க்கப்பட்டு, கட்டுடல் காளைகளும் காளையும் கலாச்சார பொலிவுடன் விளையாடும் பொங்கலாகவும் இப்பொங்கல் அமையும் என்று நம்புவோமாக.
தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக பாஜக கட்சி சார்பில் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications