பேசாமல், தமிழிசையே ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடலாமே!?
கடந்த முறை பேசப்பட்டது போல் அல்லாமல் இம்முறை தமிழிசை சவுந்தரராஜனே பாஜக வேட்பாளராக போட்டியிடலாம்.
சென்னை: தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் பட படவென ஏதோ ஒரு பதிலை கொட்டிவிட்டு செல்கிற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியிலேயே களம் காணாலாம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
மத்தியில் பாஜக ஆட்சி... தமிழகத்தில் பாஜகவின் கண்ணசைவில் அதிமுக ஆட்சி. இதனால் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தராஜன் தம்மை சர்வ வல்லமை பொருந்திய அனைத்துக்கும் தீர்வைத் தரக்கூடிய மாபெரும் தலைவராக கருதுகிறவர்.
ட்விட்டர், டிவி சேனல் பேட்டி என கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விட்டுவிடுவதில்லை என முடிவோடு இருக்கிறார். ஏற்கனவே எக்ஸ்டன்சனில் இருக்கும் தலைவர் பதவியை டெல்லி பறிப்பதற்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இட்லி கடை சோதனை முதல் குடிசை மாற்று வீடு சோதனை வரை அத்தனையும் அரங்கேற்றம் செய்கிறார் தமிழிசை.

ஆர்கே நகர் தேர்தல்
இப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் விவகாரத்தில் தலையிடப் போய் ஆளை விடுங்கப்பா சாமீகளா என தலைதெறிக்க ஓட நேரிட்டது. இப்போது ஆர்கே நகர் தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

சமூக வாக்குகள்
கடந்த முறையே ஆர்கே நகர் தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. இத்தொகுதியைச் சேர்ந்தவர்தான் தமிழிசை சவுந்தரராஜன். அத்துடன் அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளும் கணிசமாக இருக்கிறது.

மீண்டும் தேர்தல்
ஆனால் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என தெரிந்தே கங்கை அமரனை களமிறக்கி பிரசாரம் செய்தார் தமிழிசை. இம்முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

சுய பரிசோதனை களம்
நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் அடாது விடாது சவால்விடும் தமிழிசை சவுந்தரராஜன் அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக இதோ நானே களத்துக்கு வருகிறேன் என குதிக்கவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. டெபாசிட் கிடைக்கிறதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமக்கான செல்வாக்கு என்ன என்பதற்கான சுய பரிசோதனை களமாகக் கூட தமிழிசை சவுந்தரராஜன் இந்த பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளலாம்.

திவாகரன் வாக்கு
ஒருவேளை டெபாசிட்டுக்கும் அப்பால் கணிசமான வாக்குகள் கிடைத்துவிட்டால் கிடைத்தாலும் கிடைக்கக் கூடிய ‘முதல்வர் வேட்பாளர்' வாய்ப்பை ஏன் விடனும் டாக்டர்? என்பதும் சமூக ஆர்வலர்களின் கேள்வி. அதுவும் இரட்டை இலையுடன் கூடிய ஆலமரம் இருக்கையில் ‘திவாகரன்' எதேச்சையாக சொன்னதை நடைமுறைப்படுத்த முதல்வர் வேட்பாளராக முதல் படியாகவும் இருக்கட்டுமே என்கின்றனர்.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications