தோற்றாலும்.. ஓட்டுப் போட்டவர்களை மறக்காமல் நேரில் பார்த்து நன்றி சொன்ன தமிழிசை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தனக்கு வாக்களித்த 19 ஆயிரத்து 167 பேரை தேடிச் சென்று நன்றி தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சில குட்டி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டது. பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்தார்.

Tamilisai thanks 19, 167 voters in person

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தமிழிசை டெபாசிட் இழந்தார். மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அவருக்கு 19 ஆயிரத்து 167 வாக்குகள் கிடைத்திருந்தது.

டெபாசிட் இழந்தாலும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அந்த 19 ஆயிரத்து 167 பேருக்கும் நேரில் நன்றி தெரிவிக்க தமிழிசை நேற்று இரவு விருகம்பாக்கத்திற்கு சென்றார். அவருடன் அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜனும் சென்றிருந்தார்.

வாகனத்தில் நின்றபடி தமிழிசை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். படுதோல்வி அடைந்த தமிழிசை நன்றி தெரிவிக்க வந்ததை பார்த்து மக்கள் வியந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+