சட்டசபை தேர்தல்: தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை அழைத்தது திமுக!
Recommended Video
சென்னை: சட்டசபை தேர்தல் வியூகங்களுக்காக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாத் கிஷோரை திமுக அழைத்திருப்பதாக அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் ஸ்டாலினுக்கும் மக்களுக்குமான ஒரு நெருக்கம் இருப்பதாக காட்டப்பட்டது.

திமுகவினர் சொந்தமாக ஒரு வியூக அணி, ஐடி விங் என பல வகைகளில் செயல்பட்டு வந்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசாந்த் கிஷோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை பிரசாந்த் கிஷோர் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதிமுக தரப்பும் பிரசாந்த் கிஷோரை அணுகியதாக கூறப்படுகிறது.
அப்போது இதை திமுக அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலையில் திமுக, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
திமுக ஆட்சி அமைக்காமல் போனால் அதன் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும். இதனால் பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியுள்ளது.
இது தொடர்பாக திமுக தரப்பு மற்றும் பிரசாந்த் கிஷோருடனான பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இது திமுக தலைமைக்கு புதிய தெம்பை கொடுத்திருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications