அக்.11ல் கூடுகிறது தமிழக அமைச்சரவைக்கூட்டம் - அவசர ஏற்பாட்டிற்கு காரணம் என்ன?
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
சென்னை : முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் வருகிற புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு நோய் மிரட்டி வரும் நிலையில், நாளை மறுதினம் அவசரமாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சசிகலலாவின் பரோல் புதன்கிழமையோடு முடியடையும் நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டிய உள்ள நிலையில் அதனை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.