ஒருபக்கம் ஓபிஎஸ் பிரஸ் மீட்.. மறுபக்கம் ஆளுநரை சந்தித்து ஆலோசித்த முதல்வர்
Recommended Video

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ உள்ளதாக காலையிலேயே அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி இரவு 7.30 மணியளவில் சந்திப்பு நடந்தது.

இருப்பினும் இந்த சந்திப்பின் அஜென்டா, அதாவது என்ன உரையாடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 18 தகுதி நீக்கம் எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆளுநரை, முதல்வர் சந்தித்து உள்ளார் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
கருணாஸ் உள்ளிட்ட நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் அதிமுக கொறடா மனு அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து ஆளுநரிடம் முதல்வர் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுவதால் இந்த சந்திப்பு குறித்து பரபரப்பு நிலவியது.
இதனிடையே இரவு 7.10 மணியளவில் தலைமைச் செயலகத்திலிருந்து, ராஜ்பவனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். 7.30 மணியளவில் துவங்கிய சந்திப்பு 8 மணிவரை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பிரஸ் மீட் அளித்துக் கொண்டிருந்தார். அவர், கடந்த வருடம், ஜூலை மாதம், தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று தனது பேட்டியில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications