தமிழகத்தில் மின் கட்டுப்பாடு தளர்வு... ஜெயலலிதா உத்தரவு
சென்னை : உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத மின் கட்டுப்பாடும் வரும் 5.6.2015 முதல் 30.9.2015 வரை தளர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு திட்டங்களின் காரணமாக தமிழகத்தின் மின் நிலைமை சீரடைந்துள்ளது. மின் வெட்டு என்பது பழங்கதையாகிப் போனது.

கடந்த நான்காண்டுகளில் 4991.5 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி வீடு மற்றும் ஏனைய தாழ் மின்னழுத்த மின்னிணைப்புகளுக்கு இருந்து வந்த வரையறுக்கப்பட்ட மின்தடை கடந்த 1.6.2014 முதல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் 20 சதவீதமும், உச்சகட்ட நேரத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) 90 சதவீதமும் மின் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
உயர் அழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் அமலில் இருந்து வரும் 20 சதவீத மின் கட்டுப்பாடு வரும் 5.6.2015 முதல் முற்றிலுமாக நீக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு உச்சகட்ட நேரத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை) விளக்கு மற்றும் பாதுகாப்பிற்காக 10 சதவீதம் மட்டுமே மின்சாரம் உபயோகிக்கலாம் என்ற 90 சதவீத மின் கட்டுப்பாடும் வரும் 5.6.2015 முதல் 30.9.2015 வரை தளர்த்திடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications