ஆர்கே நகர் குறித்த கருத்துக் கணிப்புகளை நாளை முதல் 12-ந் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
ஆர்கே நகர் தேர்தல் குறித்து நாளை மாலை 5 மணியிலிருந்து 12ந் தேதி மாலை 5 மணி வரை எந்தக் கருத்துக் கருத்து கணிப்பையும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் தேர்தல் குறித்து நாளை மாலை முதல் 12-ந் தேதி மாலை 5 மணிவரை எந்தக் கருத்துக் கணிப்பையும் வெளியிடக் கூடது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்கே நகரில் வரும் ஏப்ரல் 12ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப்பதிவு 12-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். நாளை மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ பங்கேற்கவோ கூடாது.
வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப்பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 10.04.2017 அன்று மாலை 5 மணிக்கு மேல் அந்தத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்பது கண்டறியப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்துச்செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு, வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. 10-ந்தேதி மாலை 5 மணி முதல் 12-ந்தேதி மாலை 5 மணி வரை கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு மற்றும் கருத்து கணிப்புக்களை நடத்துவதற்குதடைவிதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications