தொடர் மழை: சென்னை சட்டக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலை உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழையின் காரணமாக சென்னை சட்டக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலை கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அந்தந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக, நாளை முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

tamilnadu exams postponed for tomorrow also univerisities

அதேபோல் வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக தேர்வு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த பல்கலைக் கழக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பேத்கார் சட்டபல்கலை கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் சட்டகல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சட்ட பல்கலை கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்திருந்தனர்.

பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில், மழை காரணமாக மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+