இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்... சென்னையில் நிலவரம் என்ன?
சென்னை: தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது வெப்பசலனம் காரணமாகவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 204 மி.மீ. ஆனால் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை 179 மி.மீ. தான் மழை பெய்துள்ளது.
நெல்லை, தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் குறைவாகவும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் சுழற்சியும், வெப்பச்சலனமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இன்று வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மற்ற சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றார் அவர்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications