உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக கிரானைட் முறைகேடு விசாரணையை திசை திருப்ப முயற்சி: பழ.நெடுமாறன்
பரமக்குடி: மதுரை கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் மதுரை கலெக்டர் தலைமையில் மற்றொரு விசாரணை நடத்தப் படுவதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
பரமக்குடியில் மேம்பாலம் கட்டுவதற்காக கொவிந்தபுரம் பகுதி குடியிருப்புகள் அகற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அந்தப் பகுதியில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவரிடம், அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை இடிக்காமல் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன், அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்து டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், மதுரையில் உயர்நீதிமன்ற ஆணையின்படி சகாயம் தலைமையில் நடைபெறும் கிரானைட் ஊழல் வழக்கு விசாரணையை திசை திருப்ப மதுரை கலெக்டர் தலைமையில் மற்றொரு விசாரணை நடத்தப்படுவதை கண்டிப்பதாகக் கூறிய பழ.நெடுமாறன், இது உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
இதேபோல், மதுப்பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளது குறித்த கேள்விக்கு, ‘அதிகாரத்தை கையில் வைத்து செயல்படும் மோடி, இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை வலியுறுத்தவேண்டும். மதுவிலக்கை அமல்படுத்திய மாநிலங்களுக்கு சிறப்பு மானியம் வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications