Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பண்டிகைக்கு, வெள்ள நிவாரண வேட்டி சேலையை கொடுக்கும் தமிழக அரசு... மக்கள் அதிர்ச்சி

சென்னை, பல்லாவரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. அதில் வெள்ள நிவாரணத்திற்கான பொருள் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லாவரத்தில் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அதில் வெள்ள நிவாரத்திற்கான பொருள் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்காக இலவச வேட்டி சேலை தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

Tamilnadu government providing Flood relief things for Pongal

இதற்காக பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டை கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதையடுத்து குடும்ப அட்டைகளுடன் சென்ற மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அதில் வெள்ள நிவாரணத்திற்கான பொருள் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குடும்ப அட்டையிலும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு விட்டதாக சீல் வைக்கப்பட்டது.

இதனைக்கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது வழங்கப்பட வேண்டிய வேட்டி சேலையை தற்போது வழங்குவதாகவும் அவர்கள் முனுமுனுத்துக்கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+