நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து.. பணிந்தது தமிழக அரசு
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இணையதள சேவையை முடக்கிய தமிழக அரசு நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இணையதள சேவையை முடக்கி உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏன் இணையதள சேவை முடக்கப்பட்டது என கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதளசேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications