கர்நாடகத்திற்கு 27-ந் தேதி வரை லாரிகளை இயக்காதீர்கள்.. லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
நாமக்கல்: கர்நாடகாவில் தொடரும் வன்முறை காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வருகிற 27ந் தேதி வரை லாரிகளை இயக்க வேண்டாம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட சுமார் 70 லாரிகள் மற்றும் 50 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

தற்போதும் இதே நிலை நீடிப்பதால் கடந்த சில நாட்களாக கர்நாடகாவுக்கும், அம்மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கும் லாரிகளை இயக்க முடியாமல் திணறி வருகிறோம். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் தினசரி ரூ.1,500 கோடி வீதம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி, கர்நாடகாவில் சுமூக நிலை வரும் வரை, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கும், கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கும் லாரிகளை இயக்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும், கர்நாடக அரசை கண்டித்து இன்று நாமக்கல்லில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. திங்கள்கிழமை வெளியான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தமிழக காவல்துறை அதிகாரிகள் வருகிற 27-ந் தேதி வரை கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். எனவே வருகிற 27-ந் தேதி வரை லாரி உரிமையாளர்கள் யாரும் கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications