3 நாளைக்கு மழை கொட்டப்போகுது மக்களே எச்சரிக்கை! - வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : காற்று மண்டல கீழடுக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் வறட்சியும், கடுமையான குடிநீர் பிரச்சினையும் நிலவுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையாவது ஓரளவுக்கு பெய்து கை கொடுக்குமா என்று மக்கள் காத்திருந்தனர். ஆனால் தென்மேற்குப் பருவமழையும் இயல்பை விட 28 சதவீதம் குறைவாகவே பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.
வறண்டு காய்ந்து கிடக்கும் நிலங்கள் கோடையில் வெயில் மக்கள் வாரிச் சுருட்டிப் போட்டது. ஆடி பட்டம் தேடி விதைக்கனும், ஆடிக் காற்றில் அம்மி கூட பறக்கும் என்றெல்லாம் பாடி வைத்தார்கள் முன்னோர்கள்.

ஆடிக் காத்தும் மாறிப்போச்சா?
ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதமோ வெளியில் தலைகாட்டினால் சுள்ளென சுட்டெரிக்கும் சூரியன் பல்லைக் காட்டுகிறது. பகலில் வாட்டும் வெயில் இரண்டாவது கோடை காலமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

பரவலாக மழை
இந்நிலையில் ஆந்திர கடலோரம் முதல் குமரிக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதன்காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஊடாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.

வெப்பசலனம்
மேலும் மேற்கு நோக்கி வீசும் காற்று வலுப்பெற்றுள்ளது. வெப்பச்சலனமும் உள்ளது. இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையிலும் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்ததால் இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

3 நாட்களுக்கு மழை வாய்ப்பு
இந்நிலையில் காற்று மண்டல கீழடுக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications