காவிரி பிரச்சினையால் பற்றி எரிகிறது தமிழகம்.. கர்நாடக பஸ்களை திருப்பியனுப்பிய போலீசார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது தமிழக பேருந்துகள் தாக்கப்பட்டது இதை தொடர்ந்து தமிழக பஸ்கள் கர்நாடகாவுக்கு செல்வது கடந்த மாதம் 9ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதே போல் கர்நாடகா பேருந்துகள் தமிழகம் வருவதும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் பதற்றம் குறைந்ததையடுத்து, ஒரு மாதத்திற்கு பிறகு, இன்று இரு மாநிலங்கள் இடையே இன்று வாகன போக்குவரத்து தொடங்கியது.

Tamilnadu police send back Karnataka gvt bus in Erode border

கர்நாடகாவிற்குள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. ஒசூர் எல்லையிலிருந்து பெங்களூருக்கு வாகனங்கள் செல்கின்றன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கர்நாடகா எல்லையில் கர்நாடகா எல்லையான புளுஞ்சூர் வரை கர்நாடகா பேருந்துகள் கடந்த 25 நாட்களாக வந்து சென்றது இன்று கர்நாடக பேருந்துகள் புளுஞ் சூரிலிருந்து தமிழக பகுதியாள சத்தியமங்கலம் நோக்கி நான்கு கர்நாடக பேருந்துகள் வந்தது. தமிழக மலைப் பகுதியான ஆசனூர் செக்போஸ்டில் இருந்த தமிழக போலீசார் கர்நாடகா பஸ்களை தடுத்து நிறுத்தி காவிரி பிரச்சனையில் இன்னமும் சுமூகமான நிலை ஏற்படவில்லை என்பதால் தேவையற்ற அசம்பாவிதத்தை தவிர்க்க கர்நாடகா பேருந்துகளை மீண்டும் கர்நாடகாவுக்கே அனுப்பி வைத்தார்.

பஸ்களில் வந்த பயணிகள் தமிழக பேருந்துகள் மூலம் சத்தியமங்கலம் வந்தனர். இதுவரை கன்னட அமைப்பினர் போராட்டத்தால் தமிழக வாகனங்கள் அம்மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை. இப்போது தமிழகத்தில் போராட்டம் உக்கிரமாக இருப்பதால், கர்நாடக பஸ்கள் தமிழகத்திற்குள் நுழைய முடியாத நிலையுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+